கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனையொட்டி கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டண வசூலிக்கப்படுவதாக சுற்றுலாவுக்கு வந்த பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
தனியார் விடுதிகள் கட்டண கொலையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார். கொடைக்கானல் மட்டுமல்லாது பழனி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பழனி வருவதாலும், வார விடுமுறை என்பதாலும் பழனியில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரோப் காருக்காகவும்,பழனி மலை ரயில் சேவைக்காகவும் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






