25. அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. –குறள் :244
நிலைபெற்ற உயிர்களைப் பேணி அவற்றிடத்தில் அருள் பூண்டவருக்கு, தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழும் தீவினையில்லை என்று அறிவோர் கூறுவர்.






