தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் நேற்று தேமுதிக தலைமை அலுவலத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் அவர்களுடைய பூதஉடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இவர்களுடைய மகன்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின்போது, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





