கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியின் ஆண்டு விழா…

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியின் ஆண்டு விழா அருட்பணி. முனைவர் ஜாண் கிறிஸ்டோபர் ஒய் சி முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களை பள்ளி வளாக நுழைவாயில் முன் பகுதியில் இருந்து தேசிய மாணவர் படையின் அணி வகுப்புடன் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.குத்து விளக்கு ஏற்றி விழா துவங்கப்பட்டு பேரருட்ப பணி முனைவர் மாத்திவ் ஜாக்கப் திருவாலில் தலைமை தாங்கி உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் செல்வ ராஜன் சிறப்புரையாற்றினார். சுவிச்சர்லாந்தை சார்ந்த ஹோன்ரேட் ஹிர்செல் மற்றும் ஜொஹானா ஹிர்செல் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு நிகழ்வாக பெதனிக்காக தயாரிக்கப்பட்ட “BEATS OF BETHANY” என்னும் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடல் குறுந் தகட்டினை அருட்பணி.தாமஸ் ரெஜி ஒஐசி வெளியிட அருட்பணி. டானியல் மண்ணில் ஒஐசி பெற்றுக் கொண்டார். பாடல் பாடிய அனைத்து மாணவ மாணவியரையும் இசை ஆசிரியையும் மேடையில் அழைத்து பள்ளி தாளாளர் பாராட்டினார்.இப் பாடலில் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் ன் குரல் இடம் பெற்றுள்ளது. 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஹான்சி ராஜேஷ் எழுதிய உணர்வின் உதயம் என்கின்ற கவிதை புத்தகம் வெளியீடு நடைபெற்றது. அருட்பணி.சிறில் ஆனந்த் ஒஐசி புத்தகத்தினை வெளியிட சிறப்பு விருந்தினர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். துறவற வாழ்வில் 25 வருட வெள்ளி விழா காணும் பெதனி நவஜீவன் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் அருட்பணி.போணி கே.அலெக்ஸ் ஒஐசி அருட்பணி.டானியேல் ஒ.ஐ.சி ஆகியோருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குருத்துவ வாழ்வில் 50 ஆண்டு பொன் விழா காணும் அருட்பணி.ஜஸ்டின் ஒஐசி க்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2022-2023 கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ யில் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த மாணவி மித்திரா வுக்கு கேடயம் மற்றும் பண பரிசு வழங்கப்பட்டது. பெதனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புபில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்த்தி மற்றும் சி.பி.எஸ்.சி யில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நிஸ்ரின் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஆன்சி ஆகியோருக்கு கேடயம் மற்றும் பண பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மாணவ மாணவியரின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் அருட் பணியாளர்கள் அருட் சகோதரிகள் இருபால் ஆசிரியர் பெருந்தகைகள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் முன்னாள் மாணவ மாணவியர் பெற்றோர்கள் ஊர் மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி ஆண்டு விழாவை ஒட்டி பள்ளி வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பள்ளி ஆண்டு விழாவானது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு பெதனி நவஜீவன் பள்ளியின் ஆண்டு விழா…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு