ஏப்ரம் 19 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேச இருக்கிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர், சத்தியமங்கலம், அவினாசி, கவுண்டம்பாளையம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





