CSIR நிதி நிர்வாகத்திற்கான புதிய ‘கணக்கு மேலாளர் மென்பொருளை’ செயல்படுத்துகிறது…!

நிதி நிர்வாகத்திற்காக சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட ‘கணக்கு மேலாளர் மென்பொருளை’ (ஏஎம்எஸ்) வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் நாட்டில் உள்ள மற்ற அனைத்து மத்திய தன்னாட்சி நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது. பொது நிதி விதிகள் உருவாக்குவதற்கு காலக்கெடுவான ஜூன் 30-க்கு முன்னதாகவே 2023-24-ம் நிதியாண்டிற்கான தனது வருடாந்தர கணக்குகளை 2024 ஏப்ரல் 01 அன்று சிஎஸ்ஐஆர் உருவாக்கியது. 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்தர கணக்குகள் ஏற்கனவே தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சிஎஸ்ஐஆர் மென்பொருளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் நிகழ்நேர கண்காணிப்புத் திறன் ஆகும். நிதி நடவடிக்கைகளைப் பயனர்கள் நிகழ்நேரத்தில் கண்காணித்தல், சரியான நேரத்தில் தலையீடு, சிறந்த முடிவெடுத்தல் ஆகியவற்றை இது உறுதிசெய்கிறது. ஏ.எம்.எஸ் மென்பொருளை மூத்த துணை நிதி ஆலோசகர் எஸ்.பி.சிங், நிதி மற்றும் கணக்குத்துறை அதிகாரி அரவிந்த் கன்னா, தொழில்நுட்ப அதிகாரி அகன்ஷா ட்ரெஹான் ஆகியோரைக் கொண்ட உட்குழு உருவாக்கியது. இது சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர்/ அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளர், டாக்டர் என்.கலைச்செல்வி மற்றும் சிஎஸ்ஐஆர் / டிஎஸ்ஐஆர் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் சேத்தன் பிரகாஷ் ஜெயின் தலைமையின் கீழ் சிஎஸ்ஐஆர் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் 37 தேசிய ஆய்வகங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

CSIR நிதி நிர்வாகத்திற்கான புதிய ‘கணக்கு மேலாளர் மென்பொருளை’ செயல்படுத்துகிறது…!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி