அண்மை செய்தி
சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார் உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார் மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ் பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா. சென்னை சைதாப்பேட்டையில் நமது முன்னாள் பத்திரிகை சங்கத்தின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோதரர் நித்திராஜ். அவர்கள் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம் தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அண்ணன்.திரு. இருதய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐

மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் ரூ.112.23 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு அரசின்  தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.03.2023)  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளத்தடுப்பு நிவாரண நிதியின் கீழ், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட இந்திரா நகர், முதல் அவென்யூவில் ரூ.29.16 இலட்சம் மதிப்பீட்டிலும், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கோவளம் வடிநிலப்பகுதியில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட கங்கை தெரு, ராம் நகர் (வடக்கு) மற்றும் ராம் நகர் வடக்கு 4வது தெருவில் ரூ.31.58 கோடி மதிப்பீட்டிலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர், 48வது தெருவில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் நடைபெற்று வருகிறது.

மேலும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட அண்ணா பிரதான சாலையில் ரூ.24.7 கோடி மதிப்பீட்டிலும், ஆர்யகவுடா சாலையில் ரூ.3.52 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பல்லவன் சாலையில் ரூ.15.4 கோடி மதிப்பீட்டில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட பணிகளை அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் இன்று (19.03.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மேற்குறிப்பிட்ட பணிகள் அனைத்தையும் காலதாமதமின்றி மேற்கொண்டு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள், வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு) அவர்கள், திரு.எஸ். ஷேக் அப்துல் ரகுமான், இ.ஆ.ப., (மத்தியம்), திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., (தெற்கு) அவர்கள், அடையாறு மண்டலக்குழுத் தலைவர் திரு.ஆர்.துரைராஜ் அவர்கள், தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.

மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆய்வு

சென்னை சைதாப்பேட்டை ஜூனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகில் Tea Heaven கடையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில் திமுக மாவட்ட துணை அமைப்பாளர் தொண்டர் அணி சைதை ஜி.வெங்கடேசன்

உலகின் மிகச்சிறந்த வார்த்தையான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி சிறந்த தமிழ் பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனாருடைய பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டிக்கு தமிழ் ராஜேந்திரன் சென்று கணியன் பூங்குன்றனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்

மாவட்டம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் எந்தன் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் கொடுக்க கடவுள் அருள் புரியட்டும் எல்லா மகிழ்ச்சியும் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும் முல்லை ராஜ்

பிறந்த நாள் நிகழ்ச்சி வந்து கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்ற அனைவரும் வாழ்த்து தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று போடு நண்பா.