இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தனர்

இந்திய வருவாய் பணியின் (வருமான வரி) பயிற்சி அதிகாரிகள் (79-வது தொகுப்பு) இன்று  குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.பயிற்சி அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், அவர்களை  நாட்டின் நிதி வலிமையின் பாதுகாவலர்கள் என்று வர்ணித்தார்.  நாட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள், வரிகள் மூலம் உருவாகும் வருவாயால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தினார். வரி ஏய்ப்பு இல்லாததை உறுதி செய்யும் அதே வேளையில், வரி செலுத்துவோர் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத வருமானங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், நேர்மையான மற்றும் சட்டப்பூர்வமான வருவாய் பாராட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.வரி நிர்வாகம் மற்றும் பணம் செலுத்துதல்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், சில தனிநபர்கள் வரிகளைத் தவிர்ப்பதற்காக அமைப்புமுறையைக் கையாள முயற்சிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்களைக் கண்டறிந்து, உரிய வரிகள் செலுத்தப்படுவதை உறுதி செய்வது வரி அதிகாரிகளின் கடமை என்று அவர் கூறினார்.டிஜிட்டல் பரிவர்த்தனைகள், உலகமயமாக்கப்பட்ட நிறுவனங்கள், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் எல்லை தாண்டிய நிதி கட்டமைப்புகள் போன்ற சிக்கலான பிரச்சினைகளை வருவாய் பணி அதிகாரிகள் அதிகளவில் கையாள்வார்கள் என்று குறிப்பிட்ட அவர், வாழ்நாள் முழுவதும் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் பயிற்சி பெறுபவர்கள் அரசின் திறன் மேம்பாட்டு தளமான ஐ காட் (iGOT)-ஐ முழுமையாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய சக்தியாக வருவாய் பணி அதிகாரிகள் ஒரு சிறப்புத் திறன் தொகுப்பைக் கொண்டுள்ளனர் என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அரசால் மட்டுமே அடைய முடியாது என்றும், குடிமக்களின் கூட்டு முயற்சிகளும் இருந்தால் அது முழுமையடையும் என்றும் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தனர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத