அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்___________________________ அரியலூர் மாவட்டம், தளவாய் & ஆலத்தியூரில் இயங்கி வரும் ராம்கோ மற்றும் இந்தியா சிமெண்ட் ஆலைகளுக்கு மூலப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அரியலூர், மருதையான் கோயில், துங்கபுரம், திட்டக்குடி பார்டர் வழியாக வந்து பெண்ணாடம் வழியாக ஆலைகளுக்கு வர வேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பர்மிட் வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆனால் கடந்த 15 நாட்களாக மூலப் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான எடைகள் மற்றும் எண்ணிக்கையில் செந்துறை, மாத்தூர் வழியாக சிமெண்ட் ஆலை நிறுவனங்களுக்கு செல்கிறது.இதுவரையில் இல்லாத ஒரு புது பாதையாக ராம்கோ & இந்தியா சிமெண்ட் ஆலைகளின் கனிம சுரங்கத்திலிருந்து மாத்தூர் வழியாக தெற்கு நோக்கி லாரிகள் இயக்கப்படுவது படுகிறது இதன் ரகசியம் என்ன? மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய இந்த பகுதியில் இந்த லாரிகள் தொடர்ந்து செல்வதால் அதனால் ஏற்படும் புழுதி காற்றை சுவாசித்து பொது மக்களுக்கு கேன்சர் மற்றும் பல்வேறு நோய்கள், உடல் உபாதைகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றது. தற்பொழுது உள்ள மாவட்ட நிர்வாகம் எப்படி வேண்டுமானாலும் மூலப்பொருட்களை கொண்டு செல்லலாம் என்கின்ற ஆலைகளின் நிலைபாட்டிற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதா என்ற கேள்வி எழுகின்றது. எனவே உடனடியாக இந்த லாரிகள் இயக்கத்தை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுத்து தடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி அனுமதி இல்லாமல் செல்லும் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும். மேற்படி லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கையாகதெரிவித்து கொள்கிறேன்.இப்படிக்கு மக்கள் காவலர் கு.முடிமன்னன் திருச்சி மண்டல செயலாளர் தமிழ்ப் பேரரசு கட்சி

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 76: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்:அன்பு என்பது






