தஞ்சாவூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள விசிகவினர் பேனர்கள் வைத்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
அந்த வகையில் தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தங்கள் சார்பில் பேனர் வைத்தனர். இந்த பேனரை மாநகராட்சியினர் அகற்றியதால் ஆத்தரமடைந்த விசிகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தான் வேலைக்கு செல்ல வேண்டும். எனக்கு வழி விடுங்கள் என்று கூறினார். அப்போது அவரிடம் விசிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ஒருவர் இளைஞரை நோக்கி வந்தார். ஆக்ரோஷமாக இருந்த அந்த இளைஞர் வேகமாக பேசவே எஸ்.எஸ்.ஐ. வேகத்தில் அந்த இளைஞர் கன்னத்தில் அறைந்ததார். அந்த இளைஞரும் உடனே அந்த எஸ்.எஸ்.ஐ-யின் கன்னத்தில் திருப்பி பளார் என அறைந்தார். இதனை விசிகவினர் வீடியோவாக எடுத்தனர். உடனடியாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர். இந்த காட்சிகள் வைரலாகி பரவி வருகிறது.

ரூ.1லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி: முதல்வர்
சென்னை:தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் விதி எண் 110 -கீழ் விவசாயிகளுக்கான






