சைதாப்பேட்டை:
சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து 142வது வட்டத்தில் உள்ள பணி மனையை சேர்ந்த கழிவுநீரகற்று வாகனம் வந்தது. இதன் மூலம் கழிவுநீர் அடைப்பு சீரமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது.
இதில் ஈடுபட்ட தொழி லாளர்கள் எந்தவித பாது காப்பு கவசங்களும் இல்லாமல் பணியில் ஈடு பட்டனர். இது மகப்பேறு மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அறுவை சிகிச்சைகள் பல மேற்கொள்ளப்படுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவு நீரகற்று வாகனத்தில் ஆங்காங்கே பெரிய பெரிய ஓட்டைகள் உள்ளன. இது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இது சாலையில் செல்வோருக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டது. நீரேற்றும் போது மோட்டார் ஆன் செய்யும்போது அதிக சப்தம் எழுப்புகிறது.
வண்டி எண் ஜிழி 01& கிஹி 4417 பதிவு எண் கொண்ட இந்த வண்டி யின் டேங்கர் மற்றும் மோட்டார் பழுதடைந் திருந்ததாலேயே இந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது, ஸ்டார் என்கிற வாகனத் தின் உதிரி பாகம் சேதம டைந்ததால் இவ் வாறு நடப்பதாகவும், வாகனத்தை எப்சிக்கு விடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கிணி கூறுவதாகவும் தெரிவி த்தார்.
கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ள இந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள், பணி யாளர்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்குவதை உறுதி செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






