சென்னை:
தென் சென்னை பகுதிக்குட்பட்ட”மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்“ வரும் 02.09.2026 அன்று தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் “மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்“ வரும் 02.09.2026 புதன்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி (எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் அருகில்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்துள்ளார்.

சாராயக்கடைக்கு இடம் கொடுத்தால் வருவாய்? ஜல்லிக்கட்டுக்கு இடம்கொடுத்தால் வீண் செலவா?: சீமான் காட்டம்
சென்னை:த.வெ.க எம்.எல்.ஏவின் கருத்துக்கு, தமிழ்நாட்டில் தெருக்கு தெரு இருக்கும் சாராயக் கடைக்கு சென்று






