குறுத்தோலை ஞாயிறை முன்னிட்டு சென்னை -மயிலை உயர் மறைமாவட்ட திருச்சிலுவைப்பாதை சின்னமலை புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருத்தூதர் புனித தோமையார் திருத்தலத்தில் மேதகு டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. சிலுவைப்பாதை சிந்தனையை ராயபுரம் பங்குத்தந்தை பி.எஸ்.காணிக்கைராஜ், சிறப்பு திருப்பலியை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி செய்தார். இதில் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், கன்னியர்கள், துறவியர்கள், பங்கு மக்கள் மற்றும் பொதுநிலையினர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழா சின்னமலை அருட்தந்தை எச்.ஜோ பாலா ஏற்பாட்டில் நடைபெற்றது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





