நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக நிர்ணயம்.

நாமக்கல்:
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இம்முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகளும், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகளும், மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், பாண்டிச்சேரிக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சராசரியாக தினசரி 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 25-ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 நாட்களில் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 காசுகளும் அதனை தொடர்ந்து இன்று 20 காசுகளும் பண்ணை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
விலை குறைப்பு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் துவங்கிய நிலையில் சத்துணவு திட்டத்திற்கு முட்டை அனுப்புவது சற்று குறைந்துள்ளதாகவும் அதே போல் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு முட்டை விற்பனையும் குறைந்து முட்டைகள் அதிகளவு தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், முட்டை விற்பனையை உயர்த்தும் நோக்கத்தில் பண்ணை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அதேசமயம் கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு 92 ரூபாயும், முட்டை கோழி 72 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

நாமக்கல்லில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக நிர்ணயம்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்