“ரோகித் சர்மாவை வீழ்த்துவது எளிது”- துஷார் கூறியதாக பரவும் தகவல்

2023 ஐபிஎல் தொடரின் முதல் இம்பேக்ட் வீரராக சிஎஸ்கே அணியின் இளம் பந்துவீச்சாளரான துஷார் தேஸ்பாண்டே அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக்கொடுத்த தேஸ்பாண்டே, சிஎஸ்கே அணிக்காக எந்தவித இம்பேக்ட்டையும் அந்த போட்டியில் ஏற்படுத்தவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, துஷார் தேஸ்பாண்டேவையும், தோனியையும் விமர்சனம் செய்யாத ஆளே இல்லை.
முதல் போட்டிக்கு பிறகு துஷார் தேஸ்பாண்டே குறித்தும், தோனி குறித்தும் கருத்து தெரிவித்திருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக், “துஷார் தேஸ்பாண்டாவை தோனி தவறான இடத்தில் பயன்படுத்திவிட்டார், அவர் இதுபோன்ற தவறுகள் செய்வதெல்லாம் அரிதானது. துஷார் தேஸ்பாண்டாவிற்கு பதிலாக, மொயின் அலியை முன்னதாகவே பயன்படுத்தியிருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இரண்டாவது போட்டியிலும் துஷார் தேஸ்பாண்டேவிற்கு கேப்டன் எம்எஸ் தோனி வாய்ப்பளித்தார். லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் தேஸ்பாண்டே. இருப்பினும் கடைசி நேரத்தில் அவர் வீசிய நோ பால் மற்றும் ஒய்டுகள் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகின.
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதிய முக்கியமான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால் 4ஆவது ஓவரை வீச வந்த தேஸ்பாண்டே, ரோகித் சர்மாவை க்ளீன் போல்டாக்கி சிஎஸ்கேவிற்கு சாதகமாக போட்டியை திருப்பினார். பின்னர் இறுதி நேரத்தில் டிம் டேவிட் விக்கெட்டையும் வீழ்த்திய அவர், சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்.
சிஎஸ்கே அணி மும்பையை வீழ்த்தி வெற்றிபெற்ற பிறகு, ரோகித் சர்மா பற்றி துஷார் தேஸ்பாண்டே கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் துஷார் கூறியதாக, “ ரோகித் எல்லாம் ஆட்டக்காரர் இல்லை. அவர் ஒன்றும் விராட் கோலியோ, டிவில்லியர்ஸோ கிடையாது. பந்துவீசுவதற்கும், விக்கெட் வீழ்த்துவதற்கும் ரோகித் மிகவும் எளிதானவர்” என்று கூறியதாக வேகமாக பரவியது.
துஷார் தேஸ்பாண்டேவின் இந்த கருத்து மும்பை ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் சிஎஸ்கே ரசிகர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கருத்து பரவி ஒருநாள் கடந்த பிறகு, தற்போது அது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் துஷார் தேஸ்பாண்டே.
ஹிட்மேன் ரோகித் சர்மா பற்றி கூறியதாக பரவிய கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார், துஷார் தேஸ்பாண்டே. இது போன்ற தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள துஷார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில், “ அந்த கருத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று லெஜண்டுகள் மீதும் எனக்கு முழுமையான மரியாதை இருக்கிறது. இதுபோன்ற கீழ்த்தரமான அறிக்கைகளை நான் செய்யவில்லை, எப்போதும் செய்யவும் மாட்டேன். இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
துஷார் தேஸ்பாண்டே ரோகித் குறித்து கருத்து தெரிவித்ததாக வதந்தி பரவிய நிலையில், அவர் சமீபத்தில் எந்தவிதமான நேர்காணல்களும் எங்கும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

“ரோகித் சர்மாவை வீழ்த்துவது எளிது”- துஷார் கூறியதாக பரவும் தகவல்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65