+2 பொதுத்தேர்வில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகள்…

2022-2023ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2626 மாணவர்கள் மற்றும் 3273 மாணவியர் என மொத்தம் 5,899 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 2129 மாணவர்கள் (81.07%) மற்றும் 2995 (91.50%) மாணவியர் என மொத்தம் 5,124 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும்.  (கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47% ஆகும்.)

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதத்தில் வேதியியல் பாடப் பிரிவில் 1, தாவரவியல் பாடப்பிரிவில் 1, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவில் 2,  வரலாறு பாடப்பிரிவில் 1, புவியியல் பாடப்பிரிவில் 2, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப்பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப்பிரிவில் 25, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 மற்றும் கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவில் 9 மாணவ./மாணவியர்கள் என மொத்தம் 71 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மேலும், 42 மாணவ, மாணவியர் பல்வேறு பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 52 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 254 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 456 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் எம்.எச். சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 589 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், மடுவின்கரை சென்னை மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 583 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 582 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.29 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.44 சதவீதத்துடன் நான்காம் இடத்தையும், திருவான்மியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 95.55 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தையும்  பெற்றுள்ளன. 

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

+2 பொதுத்தேர்வில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகள்…

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்