1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 6. வாழ்க்கை துணை நலம்
புகழ்புரிந்து இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்
ஏறுபோல் பீடு நடை. – குறள் : 59
தம் புகழைக் காக்க விரும்பும் மனைவியல்லாதவர்க்குத் தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன் ஆண்சிங்கம் போன்று இறுமாந்து நடக்கும் பெருமித நடை இல்லை.






