பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பந்துவீச கூடுதல் நேரம்: நிதீஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி