சென்னை, பல்லாவரம் : பல்லாவரம் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் பதட்டம் 15.5.2023 நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கண்டோன்மெண்ட் பகுதி நரிக்குறவர்கள் காலணிக்கு நள்ளிரவு காவல் துறையினர் சென்று நரிக்குறவர் விஜயன் என்பவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று உள்ளனர்.
இது சம்பந்தமாக காலையில் நரிக்குறவர்கள் பலர் பல்லாவரம் காவல் நிலையம் சென்று விஜயனைக் குறித்துக் கேட்டபோது நாங்கள் அழைத்து வரவில்லை என்று காவலர் சொல்லியதால் நரிக்குறவர்கள் பதற்றமடைந்தனர்.
பல்லாவரம் காவல் துறையினரும் பல காவல் நிலையங்களில் தொடர்புகொண்டு நரிக்குறவர் விஜயனைக் குறித்துக் கேட்டறிந்தனர். இல்லை என்ற தகவல் கிடைக்கவே தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் இரா.மு.அருண்குமார் புகைப்பட கலைஞர் சி.சுகுமார் ஆகியோர் சம்மந்தப்பட்ட நரிக்குறவர்கள் காலணிக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற போது, அங்கு அவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் குறிப்பாக சாலை வசதி சரியான தெருவிளக்கு மின்கம்பங்கள் இல்லாமலும் குடிதண்ணீர் குழாய் மற்ற எந்தவித வசதியும் இல்லாமல் பரிதவிக்கும் நிலையும் எங்கேயோ ஒரு சில இடங்களில் திருடு போனாலும் கூட பொதுமக்களில் சிலர் வந்து ஆடு திருடு போனாலும் மாடு திருடு போனாலும் கூட நாங்கள் தான் திருடினோம் என்று இங்கு வந்து அடிக்கவருவதும் மிரட்டுவதும் வழக்கமாக உள்ளது.
மேலும் காவல்துறையினரும் வந்து மிரட்டுவது மிகவும் வேதனையாக உள்ளது. இதன் பிறகு காவலரால் நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்ட விஜயனைக் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் காவல் நிலைய போலீஸ்சார் அழைத்துச் சென்றதாக பல்லாவரம் காவல் துறையினரால் தகவல் கிடைக்கப் பெற்றது என்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்ற செய்தியினை நமது தகவல் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் நரிக்குறவர்கள் யாவரும் தெரிவித்தனர்.









