சென்னை அசோக் நகர் 11 வது அவின்யூ சாலையில் தண்ணீர் டேங்க் அருகிள் இன்று மாலை அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிரக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனையாக R 6 காவல் நிலையம் உதவியுடன் கிரேன் வண்டி மூலம் டிராக்டரை அகற்றி சீர் படுத்தபட்டது. இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்கு வரத்து பதிப்புகப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் ஸ்ரீராம் கூறியதாவது : நான் ஒரு ஆக்டிங் டிரைவர். நான் காரை ஓட்டிக்கொண்டு வரும் போது என் கார் பக்கதில் தான் இச்சம்பவம் ஏற்பட்டது. தண்ணீர் டிராக்டர் ஓட்டிய டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் கட்டுபாட்டை இழந்து விபத்து நேர்ந்தது என்றார். – நிருபர் ஜெபசக்தி.







