1. அறத்துப்பால் : 2. இல்லறவியல் : 9. விருந்தோம்பல்
விரும்பி புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. – குறள் : 82
வந்திருக்கும் விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு, உள்ளிருந்து தாங்கள் மட்டுமே உண்ணுதல், உண்ணப்படும் பொருள் சாவா மருந்தாகிய தேவமிர்தமே ஆனாலும், விரும்பத்தகாதது ஆகும்.







