ஒடிசா சென்ற அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்

ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம்  மற்றும் இதர உதவிகளை செய்திடவும் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,  போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்டின நாயக் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் உடனடியாக ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலச்சோர்  என்ற இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளை கண்காணித்து உதவி செய்தனர்.  மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.இதன் பின்னர் அமைச்சர்கள் குழு நேற்று ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியது.

இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா மாநிலம் சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னை திரும்புகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சிவசங்கர் நேற்று வந்த நிலையில் அதிகாரிகள் இன்று இரவு சென்னை வருகின்றனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

ஒடிசா சென்ற அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்