திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ரூ.30 கோடி மதிப்பில், மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் தலைமையில், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், இன்று (05.06.2023) அடிக்கல் நாட்டினார்கள்.

உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, அரசு முதன்மை செயலாளர் திரு.ககன்தீப்சிங்பேடி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., அவர்கள், அவர்கள், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சா.ஞானதிரவியம் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன் அவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.







