மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (07.06.2023) காலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிக்குட்பட்ட விளாந்தங்கல் சாலையில், அமைந்துள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்து, நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷ்ரவன் குமார் இஆப, அவர்கள்,சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு தா.உதயசூரியன் அவர்கள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சு.ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







