மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் , நேற்று சென்னை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பயிற்சி மேற்கொண்டு நிகழ்ச்சியில் விழா பேரூரையாற்றினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை ஆணையர் மைதிலி.கே.ராஜேந்திரன், இ.ஆ.ப., இணை இயக்குநர் மரு.பார்த்திபன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருமணவாளன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்








