பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-187 மற்றும் 188
ஆகிய வார்டுகளில் 457 சாலைகளில் 124 சாலைகளில் சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 40 சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பின்னர் இவற்றில் தற்காலிகமாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இதர 84 தெருக்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று (22.06.2023) பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். இந்த ஆய்வில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி முடிவுற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சாலை அமைக்கும் பணியினை மக்களுக்கு இடையூறின்றி விரைந்து முடித்திடவும், இதரப் பணிகளையும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து முடித்திடவும் ஆணையாளர் அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.








