இன்று (04.07.2023) நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்று உயர்கல்வி பயிலும் 259 மாணவர்களுக்கு ரூ.49 இலட்சம் கல்வி ஊக்கத் தொகையினை ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கினார். இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர்
முனைவர் தா.கார்த்திகேயன், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், , துணை ஆணையாளர் ஷரண்யா அறி, (கல்வி), நிலைக்குழுத் தலைவர் த.விசுவநாதன் (கல்வி) மற்றும் நிலைக்குழு / மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






