இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் 2025 பிப்ரவரி மாத சென்னை பொறுப்பாளர்கள் கூடுகை நேற்று 5-2-25 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நமது தலைமை அலுவலகம் மதனந்தபுரம் சமூக நல்லிணக்க வள்ளுவர் கூடம் தில் நடைபெறும். சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட பெருமாவட்டமாக 5 பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கி, பகுதிக்கு 7 பொறுப்பாளர்களை கொண்டு செயல்படும். இந்தியர் ஆன்மிக விடுதலை இயக்கம் சென்னை கூடுகை மிக அருமையாக நடைபெற்றது.15-3-25 பேரவை 3 ஆம் ஆண்டு விழா, மாவட்ட ஆன்மீக இலவச நூலகம் & படிப்பகம் திறப்பு விழா, உறுப்பினர் சேர்க்கை, ஆன்மீக கல்வி சுற்றுலா, ஆன்மீக விடுதலை மாவட்ட விளக்க கூட்டம் போன்ற முக்கிய தீர்மானங்கள் ஆலோசிக்க பட்டது.

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது
மத்திய அரசின் சட்டம் அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.





