உச்ச நீதிமன்றம்: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை…

புதுடெல்லி: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையின்போது டெல்லியில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் காற்று மாசு அபாய அளவை எட்டிஉள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை. பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கப்பட்டால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும்.

பட்டாசு தடையை டெல்லி போலீஸார் முறையாக அமல்படுத்தவில்லை. தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று டெல்லி அரசு கடந்த அக். 14-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அப்போதே டெல்லி போலீஸார் பட்டாசு விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்டாசு விற்பனையை முழுமையாக தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். பட்டாசு விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதை தடுக்க சிறப்பு பிரிவை டெல்லி போலீஸ் கமிஷனர் ஏற்படுத்த வேண்டும். இந்த சிறப்பு பிரிவு போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும்.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிப்பது குறித்துடெல்லி அரசு வரும் 25-ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும். பட்டாசு தடையை அமல்படுத்துவது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் வரும் 25-ம் தேதிக்குள் விரிவான பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பட்டாசு தடை தொடர்பாக டெல்லியின் அண்டை மாநிலங்கள் வரும் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத

உச்ச நீதிமன்றம்: காற்றை மாசுபடுத்த எந்த மதமும் ஊக்குவிப்பது இல்லை…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத