ஒடிசா சென்ற அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்

ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம்  மற்றும் இதர உதவிகளை செய்திடவும் , உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,  போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த ரெட்டி , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் திருமதி அர்ச்சனா பட்டின நாயக் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் உடனடியாக ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலச்சோர்  என்ற இடத்தில் நடைபெற்ற மீட்பு பணிகளை கண்காணித்து உதவி செய்தனர்.  மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆசிரியர் தேர்வாணைய குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.இதன் பின்னர் அமைச்சர்கள் குழு நேற்று ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பியது.

இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ஒடிசா மாநிலம் சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னை திரும்புகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சிவசங்கர் நேற்று வந்த நிலையில் அதிகாரிகள் இன்று இரவு சென்னை வருகின்றனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

ஒடிசா சென்ற அதிகாரிகள் சென்னை திரும்புகிறார்கள்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்