மருத்துவத் துறையில் 33 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன் அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று (28.08.2023) பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநர் த.ந.ஹரிஹரன், இ.ஆ.ப.பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலர், பெருநகர சென்னை மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.ஜெகதீசன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி ஒருங்கிணைப்பு அலுவலர் மருரமேஷ், பேராசிரியர்கள், செவிலியர்கள்
மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்




