சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் மூழ்கி நேற்று வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலையில் அவரை மீட்டபோது இன்னொரு வாலிபர் குதித்து விட்டார். அவரும் கூவம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரது உடலை தேடும்பணி நடைபெற்று வருகிறது. இருவரும் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். எழும்பூர் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த இருவரில் ஒருவர் நேற்றிரவு கூவத்தில் குதித்த நிலையில் இன்று காலையில் இன்னொருவரும் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பதை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





