புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில், அப்பகுதி மக்களை அச்சமடைய வைத்த சுமார் 9 அடி மலை பாம்பு ஒன்று, கோழியை விழுங்கிய நிலையில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அச்சப்பட்டு திருமயம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், அங்கு புதருக்குள் இருந்த மலைப்பாம்பை உயிரோடு பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு எற்படுத்தியது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 47: இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை குறள்





