திருக்குறள் அதிகாரம்-4
அறன் வலியுறுத்தல்
அறத்தின் இன்றியமையா மையை வலியுறுத்தல்
குறள் 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்னஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
குறள் விளக்கம்: அறம் சிறப்பையும் செல்வந்தையும் தரும் ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறந்தைக் காட்டிலும் மிக்க ஆக்கம் தருவது எது? (வேறொன்றுமில்லை).
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 19:17 “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறாள். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என்றும் சங்கீதம் 1129 “வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தாள். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்” என்றும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்






