புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்…

புதுச்சேரி:
புதுவை முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுவை அரசியலில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் ப.கண்ணன். சட்ட பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தார். 2021 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவிலிருந்த அவர், அரசியலில் இருந்து முழுமையாக விலகினார். மணிப்பூர் கலவரத்தின்போது பாஜகவிலிருந்தும் விலகுவதாக தெரிவித்தார். கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கிரஸ், தமாகா, அதிமுக, பாஜக: மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74. தனது இளமை பருவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக ப.கண்ணன் பணியாற்றினார்.

மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு மதிமுக பொது செயலாளர் வை.கோ அஞ்சலி செலுத்தினார். புதுவை மாநிலம் முழுவதும் உள்ள மறைந்த ப.கண்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட