மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 139வது வார்டு, ஜாபர்கான்பேட்டை, சென்னை உயர்நிலைப் பள்ளி, 140வது வார்டு, மேற்கு மாம்பலம், சென்னை மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் மற்றும் 142வது வார்டு, மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





