மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை துவங்கி நடைபெற உள்ளது என அதிமுக தேர்தல் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அவர் தான் அதிமுகவில் பொதுச்செயலாளராக இருந்தார். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. ஓ பன்னீர் செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் மாறிமாறி மனு தாக்கல் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தநிலையில் கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் தேர்தல் ஆணையாளராகவும் உள்ள நத்தம் விசுவநாதன் மற்றும் கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் தேதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2ல் குறிப்பிட்டுள்ளவாறு கழக பொதுச்செயலாளர்’’ கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்’’ என்ற விதிமுறைக்கு ஏற்க கழக பொதுச்செயலாளர்’’ பொறுப்பிற்கான தேர்தல் கீழ்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.
கழக பொதுச்செயலாளர்’’ பொறுப்பிற்கு போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட கால அட்டவணைப்படி தலைமை கழகத்தில் கட்டணத்தொகை ரூ.25,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கழக சட்டவிதி 20 அ பிரிவு – 1, (ஏ) (பி) (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நாளை நடக்கிறது.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராவது உறுதியாகி உள்ளது. மேலும் அவரை எதிர்த்து கட்சி சார்பில் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான கனவு நனவாக உள்ளது.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை