முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் : நாடாளுமன்ற தேர்தல் 2024 : ராமநாதபுரம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

இதற்காக ஹெலிகாப்டரில் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார். அவரது ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:- ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடி, ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி போட்டியிட்டால் எப்படி ஆதரவு தருவீர்களோ அப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தர வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

எம்.ஜி.ஆரை, கருணாநிதி வெளியேற்றியதை போல ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் விஸ்வரூபம் தெரியும். ராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் : நாடாளுமன்ற தேர்தல் 2024 : ராமநாதபுரம்

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்