தேனி மாவட்டம் போடி அருகே குச்சனூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை தொடங்கி கூழையனூர், குச்சனூர், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் விலை நிலங்கள் இருக்கின்றன. இங்கு நெல் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தற்போது முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுள்ள நிலையில் அந்த பகுதி விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடி செய்ய தொடங்கி விட்டார்கள்.
தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் உற்சாகமடைந்த விவசாயிகள் நடவு மற்றும் உழவு பணிகளை தீவிரம் காட்டி வருகிறார்கள். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போது உப்புக்கோட்டை, குச்சனூர், கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இடைப்பட்ட காலங்களில் உளுந்து, பாசிப்பருப்பு, தட்டாம் பயிர், வெள்ளரி, மக்காசோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுவதை விவசாயிகள் வழக்கமாக பணியாக செய்து வருகிறார்கள.






