வாக்னர் குழு விவகாரம்: “ரஷ்யாவுடன் துணை நிற்போம்” – சீனா…

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. இந்த நிலையில், சமீபகாம வாக்னர் குழுவுக்கும், ரஷ்யாவுக்கும் மத்தியில் மோதல் வெடித்தது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்போம் என வாக்னர் குழு அறிவித்தது. இதற்கு பதிலளித்த ரஷ்ய அதிபர் புதின்,’வாக்னர் குழுவின் செயல் ஒரு துரோகம் செய்வது போல் உள்ளது. இதற்கு வாக்னர் குழுவுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார். .ரஷ்ய தரப்பு, “யெவ்ஜெனி ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும். அவர் வெளியேறினால் அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது” எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் ரஷ்யாவிலிருந்து வெளியேறி பெருலஸ் நாட்டிற்கு யெவ்ஜெனி ப்ரிகோஜின் செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் வெடிக்க இருந்த உள்நாட்டு போர் தொடர்பான அச்சம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான வாகனர் படையின் எழுச்சி குறித்து சீனா அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் ,”எங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய அத்தியாயத்தின் கூட்டுறவு பங்காளியாகவும் இருக்கும் ரஷ்ய நாட்டின் தேசிய உறுதித்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதில் ரஷ்யாவுடன் சீனா எப்பொழுதும் துணை நிற்கும்” என்று சீனா கூறியிருக்கிறது. சீனாவின் இந்த அறிவிப்பு உலக அரசியலில் ஒரு முக்கியமான அறிவிப்பாக கருதப்படுகிறது. .

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

வாக்னர் குழு விவகாரம்: “ரஷ்யாவுடன் துணை நிற்போம்” – சீனா…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்