இன்று (14.07.2023) செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கடற்கரை கழிமுகப்பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழல் காத்திடும் அலையாத்தி காடுகள் உருவாக்கிட மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் சிறப்புச் செயலாளர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை சந்திர பிரகாஷ் கோயல், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்/தலைமை வன உயிரின காப்பாளர் திரு.ஸ்ரீனிவாஸ் ரா.ரெட்டி, சென்னை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் கௌ.கீதாஞ்சலி, அரசு அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.







