ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி திடீர் திருமணம் – நொடியில் மாயம்… போலீசார் தீவிர விசாரணை

ஆம்பூர்:
ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு தாலி கட்டிய கையோடு அங்கிருந்து தப்பியோடிய காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பரபரப்பான நகரம் என்பதாலும், இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் செயல்பட்டு வருவதாலும் இங்குள்ள பேருந்து நிலையம் பகல் நேரத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். வெளியூர் செல்லும் பயணிகளின் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 9 மணியளவில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று செய்வது அறியாது திகைத்தபடி நின்று கொண்டிருந்தது. திடீரென அங்குள்ள கழிவறை பின்புறமாக சென்று யாரும் இல்லாததை அறிந்த காதலன் அவசர அவசரமாக தனது காதலிக்கு தாலி கட்டினார். இதனை மக்கள் கவனித்த அடுத்த நொடிகளிலேயே அந்த ஜோடி அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டார். இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட ஆம்பூர் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில்£ பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி திடீர் திருமணம் – நொடியில் மாயம்… போலீசார் தீவிர விசாரணை

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு