பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், கோட்டம்-163, பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியின் எரிவாயு தகன மேடையினை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திடவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாலும் 10.05.2023 முதல் 10.07.2023 வரை இரண்டு மாத காலங்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-162க்குட்பட்ட கண்ணன் காலனி மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 101:செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது விளக்கம்: தமக்கு எந்த





