இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

இன்று டில்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கு கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்தக் கூட்டத்தைக்  காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி), ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம்,

“டில்லியில் நடைபெறும் பொதுக்கூட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கானது அல்ல  அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கானது. அதனால்தான் இதை ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொதுக்கூட்டம் என அழைக்கிறோம். இந்த பொதுக்கூட்டம் எந்த ஒரு கட்சியின் கூட்டமும் அல்ல. சுமார் 28 கட்சிகள் இதில் ஈடுபடுகின்றன. இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், ஆதரவையும் பற்றிய வலுவான செய்தியை இந்த கூட்டம் ராம்லீலா மைதானத்தில் இருந்து லோக் கல்யாண் மார்க்குக்கு (பிரதமர் இல்லம்) அறிவிக்கும். விலைவாசி உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் உயர்வு, பொருளாதாரப் பாகுபாடுகள், சமூக பிளவுகள், விவசாயிகளுக்கான அநீதி போன்றவை இந்த கூட்டத்தில் எழுப்பப்படும். எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு பிரச்சினையாக முன்வைக்கப்படும். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகக் குறிவைக்கும் முயற்சியில் 2 முதல்-மந்திரிகள் மற்றும் பல மந்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் முடக்குவதற்குப் பிரதமர் விரும்புவதை காட்டுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காங்கிரசை வரி பயங்கரவாதத்தால் குறிவைப்பது போன்ற பிரச்சினைகளும் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்படும். எங்களுக்கு மேலும் 2 வருமான வரித்துறை நோட்டீசுகள் வந்துள்ளன. இந்த பொதுக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். பா.ஜனதா தலைவர்கள் அதை மாற்றி எழுத விரும்புவதால், அது ஆபத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65