இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது.

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது. இதுகுறித்து தான்சானியா நாட்டு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

ஐஐடி மெட்ராஸ் தனது சர்வதேச வளாகத்தை தான்சானியாவின் சான்சிபாரில் அக்டோபர் 2023 இல் திறக்க உள்ளதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
‘தி சிட்டிசன்’ என்ற தான்சானியஉள்ளூர் நாளிதழின் படி – புதிய ஐஐடி வளாகம் சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் அட் சான்சிபார் என்ற பெயரில் அமைக்கப்படும். இந்த வளாகம் 50 இளங்கலை மற்றும் 20 முதுகலை இடங்களுடன் அக்டோபர் 2023 இல் திறக்கப்படும்.

இந்தியாவுக்கு வெளியே இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) வளாகங்கள் சான்சிபார், அபுதாபி மற்றும் கோலாலம்பூர் ஆகிய மூன்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது. சான்சிபாரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகம், கிழக்கு ஆப்பிரிக்க பிராந்திய மாணவர்களுக்கு சேவை செய்யும்.

சான்சிபாரில் அமையவிருக்கும் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் முதல் ஆண்டு தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு படிப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது இதற்கான கட்டண அமைப்பு தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை.

தி சிட்டிசனிடம் பேசிய சான்சிபார் அதிபர் ஹுசைன் முவினி, இந்த திட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பகிர்ந்துள்ளார். நாட்டில் ஐஐடி அமைப்பது குறித்து முதன்முதலில் நவம்பர் 2022 இல் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகையின் போது விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

சான்சிபாரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் மூலம், சேரும் மாணவர்கள், இந்தியாவில் உள்ள மாணவர்களின் அதே நிலை மற்றும் சலுகைகளை அனுபவிக்க முடியும் மேலும், ஐஐடி சான்சிபாருக்கான சேர்க்கை செயல்முறை மூன்று மடங்கு செயல்முறையில் செய்யப்படும் – நுழைவுத் தேர்வு, ஒரு மாத தயாரிப்பு நிரல் மற்றும் பின்னர் ஒரு தனிப்பட்ட நேர்காணல்.

சான்சிபாரில் அமைய உள்ள ஐஐடி மெட்ராஸ் வளாகம் செயல்பட துவங்கிய ஐந்து ஆண்டுகளில் அதற்கான நிரந்தர வளாகம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை மிக விரைவில் திறக்கவுள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்