சென்னை:
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித் பேசுகையில், கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது. இதை முதலமைச்சர் கண்டித்துள்ளார். கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.
மேலும் ஒரு தமிழரான மகிமை தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கக் கூடிய நிலைமை இருக்கிறது. கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு. இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன் என்றார்.

முதல்-வர் விஜய் அலுவலகம் மாற்றப்படுவது ஏன்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சென்னை,புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த






