உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு (NEET – Super Speciality) புதிதாக 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

.
நாள் : 06.11.2025.

புதிய பணியிடங்களை மருத்துவத்துறையில் உருவாக்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகச் சென்றன .
தமிழ்நாட்டிலும் 40 இடங்கள் காலியாகப் போய்விட்டன.
இந்த இடங்களை நிரப்பிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் ஏராளமான இடங்கள் காலியாகப் போய்விட்டன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் தான் காலியாகப் போயின.
அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாகப் போவது, அரசு மருத்துவர்களுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவமனைகளுக்கும் ,ஏழை நோயாளிகளுக்கும் பெரும் இழப்பாகும். இத்தகையப் போக்கை தடுத்திட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வின் போது அந்த மருத்துவ இடங்களில் சேர போதுமான அரசு மருத்துவர்கள் இல்லாததால் அவ்விடங்கள் காலியாகின்றன. அவ்வாறு காலியாவதை தடுத்திட வேண்டும்.
அதற்கு , அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர , குறைந்தபட்சம் இரண்டாண்டு அரசுப் பணியை முடித்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், மருத்துவ இடங்களை எடுக்க, இரண்டு ஆண்டு அரசுப்பணி முடித்தவர்கள் இல்லாத சூழலில், ஓராண்டு பணி முடித்தவர்களை அவ்விடங்களை எடுத்திட அனுமதிக்க வேண்டும்.
அதன் பிறகும் இடங்கள் காலியாகப் இருந்தால், இறுதிக் கட்டத்தில்
அவற்றில் ,அரசுப் பணியில் புதிதாகச் சேர்ந்த மருத்துவர்களையும் சேர , அனுமதிக்கலாம்.
அதற்கு ஏதுவாக, எம்.டி / எம்.எஸ் படிப்பை முடித்து தற்பொழுது, அரசுப்பணியில் சேர்ந்துள்ள அனைத்து அரசு மருத்துவர்களையும் , வரும் கல்வி ஆண்டிற்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான , நீட் எஸ்.எஸ் தேர்வை எழுதிட அனுமதிக்க வேண்டும்.
தற்பொழுது அந்த தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் உடனடி முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.

மருத்துவ இடங்களில் சேர்வதில் மாநில உரிமை பறிபோகும் நிலை உள்ளது. மாநில உரிமைக்கு எதிரான, மாநில இட ஒதுக்கீடு

(Domiciliary reservation ) ரத்து என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடும் காக்கப்பட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் காலியாகப் போகும் நிலையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக, தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்திட வேண்டும்.

புற்று நோய் சிகிச்சை வழங்கிட பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 60 மருத்துவர்கள் பணியிடங்களை ,தமிழ்நாடு அரசு உருவாக்கி இருப்பது வரவேற்பிற்குரியது.

அதே சமயம் பல மருத்துவக் கல்லூரிகளில் இருந்த மருத்துவர்களுக்கான பணியிடங்களை ,தமிழ்நாடு அரசு ஒழித்துக் கட்டியிருப்பது சரியல்ல.
எனவே,60 பணியிடங்களை ஒழித்துக் கட்டியதை ரத்து செய்ய வேண்டும்.

புதிய மருத்துவமனைகள் திறக்கும் பொழுதும், புதிய துறைகள் உருவாக்கும் பொழுதும், அந்த இடங்களின் தேவைகளுக்கு ஏற்ப, விதிகளுக்கு ஏற்ப , புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். செவிலியர்கள் உள்ளிட்ட இதர அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பணியிடங்களையும் அவ்வாறு புதிதாக உருவாக்கி நிரப்பிட வேண்டும். அதற்கு மாறாக ஏற்கனவே பணியில் இருப்பவர்களை இட மாறுதல் செய்து

(Redeployment ) நிரப்புவதை தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கும், மருத்துவமனைகளில் மருத்துவத்துறை பணியிடங்களை பாதுகாக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். நோயாளிகளின் நலன்களையும், அரசு மருத்துவர்களின் நலன்களையும் காத்திட வேண்டுமென, தமிழ்நாடு அரசை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு (NEET – Super Speciality) புதிதாக 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்களையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65