உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0….

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உத்வேகம் பெற்று, தூய்மையை நிறுவனமயமாக்குவதற்கும், அரசில் நிலுவைகளை குறைப்பதற்கும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு துறை அமைச்சருமான அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த இயக்கம் அக்டோபர்2 முதல் 31 வரை ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் இது நிலுவைகளை அகற்றுதல், சிறந்த மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சர், இணை அமைச்சர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் இந்த இயக்கத்தை உயர் மட்டத்தில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தினசரி முன்னெடுப்புகள் ஒரு பிரத்யேக குழுவால் கண்காணிக்கப்பட்டு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைதீர்ப்புத் துறையால் வழங்கப்படும் எஸ்.சி.பி.டி.எம் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

உள்துறை அமைச்சகம் கிட்டத்தட்ட அனைத்து இலக்குகளிலும் 100% பூர்த்தி செய்தது. சுமார் 167240 சதுர அடி பரப்பளவு விடுவிக்கப்பட்டு, 95000 க்கும் மேற்பட்ட கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன. குப்பை அகற்றுதல் மூலம் ரூ.5.82 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அனைத்து இடங்களிலும் 10,274 இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்), யூனியன் பிரதேசங்கள் , மத்திய போலீஸ் அமைப்புகள் உள்துறை அமைச்சக பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றன மற்றும் அதன் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன.

செப்டம்பர் 15, 2023 முதல் தூய்மைப்படுத்துதல், நிலுவையில் உள்ளவற்றை அகற்றுதல் போன்றவற்றுக்கு மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை அடையாளம் காண ஆயத்த கட்டத்துடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு

உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0….

ஒடிசா சுந்தர்கர் மாவட்டத்தில் பெண் ஒருவரை சமூகப் புறக்கணிப்பு செய்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு உதவ கிராமத்தினர் மறுத்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் மகுல்திகா கிராமத்தில் 12 ஆண்டுகளாக சமூகப் புறக்கணிப்புக்கு