கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு- கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலு£க அடூர் மலைப்பகுதியில் நேற்று மாலை அதி தீவிர கனமழை பெய்தது. இதனால் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் சிக்கி உயிரிழந்திருப்பதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
நிலச்சரிவை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 34 வீரர்கள் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் விரைந்தனர். அவர்கள் உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உட்பட கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: ஒருவர் உயிரிழப்பு- கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்