கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் – 2022 பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.5.89 கோடி மதிப்பீட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவகக் கட்டடம் அமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (28.06.2023) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா , சட்டமன்ற உறுப்பினர்கள் .இ.பரந்தாமன் (எழும்பூர்) , .ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (விருகம்பாக்கம்) கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., , மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் க.தனசேகரன் (கணக்கு) நே. சிற்றரசு (பணிகள்) 10, 11 மற்றும் 14 மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசாபர் அகமது , மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் இயக்குநர் மரு. இரா. சாந்தி மலர், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. எ. தேரணி ராஜன் , அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மரு. ரெமா சந்திர மோகன் , அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மரு. க. கலைவாணி அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்







